கோவை, கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் பகுதியில் செயல்படும், சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும், பருவம் அடைந்த மாணவியை தனிமைப்படுத்தி, படிக்கட்டில் அமரவைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம், சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விவகாரம் குறித்து கோவை மக்களிடம் பேசினோம்…
- ‘மனநலத்திற்கு தீங்கு’
ஆசிரியர்கள் தங்கள் பணியறிவைப் பின்பற்றாமல் இவ்வாறு நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. மாணவியின் மனநிலையை இது பெரிதும் பாதிக்கக்கூடும்.
– ராமசாமி,56, தனியார் கல்லூரி ஊழியர்
- ‘இது எந்த காலம்’
இது நவீன காலமா, இல்லை அறிவு இல்லாத காலமா? தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து இருக்கும் சமயத்தில், ஒரு பள்ளியில் இப்படி நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.
– வெள்ளியங்கிரி, 56
சலூன் கடை உரிமையாளர்
- ‘எங்கள் காலத்திலேயே இல்லை’
மாதா மாதம் மாதவிடாய் ஏற்படும். ஒவ்வொரு முறையும் இப்படியா நடத்தப்போகிறார்கள்? நாங்கள் படித்த காலத்திலும், இதுபோன்ற நிகழ்வுகள் இல்லையே.
– சரஸ்வதி,55, தனியார் ஊழியர்
- ‘இப்படி நடக்கலாமா?’
ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல், ஒரே வகுப்பில் படிக்கிறோம். அதே சமயம் மாதவிடாய் காரணமாக ஒருவரை தனிமைப்படுத்துவதுஅசிங்கமானது.
– மேகா,21, கல்லூரி மாணவி
- ‘இது தீட்டா?’
இன்றும் எங்களை, இந்த சமூகம் வேறுபடுத்திப் பார்க்கிறது. பருவம் அடைவது ஒரு இயற்கை நிகழ்வுதானே? அதற்காக புறக்கணிப்பது எந்த நியாயம்?
– மானசா,26, திருநங்கை
- ‘இப்படி செய்வாங்களா?’
அந்த மாணவியின் மனநிலை, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்? ஆண்கள் கூட இப்படி செய்ய மாட்டார்கள். பெண் ஆசிரியை செய்தார் என்பது, வெட்கம் தரும் செயல்.
– பிரணவ் விநாயக்,20, கல்லூரி மாணவர்
- ‘இது என்ன நோயா?’
மாணவியை இவ்வாறு நடத்தியது, மனிதநேயம் இல்லாத செயல். இப்படி ஒரு சமயத்திலும் மாணவிக்கு ஆதரவு அளிக்காமல், தனிமைப்படுத்துவது தவறு. இது என்ன தொற்று நோயா?
– ஜெயஸ்ரீ,22, கல்லுாரி மாணவி
- ‘தொடர வேண்டாமே’
எங்கள் அம்மா காலத்தில், இந்த கட்டுப்பாடுகளை நாங்கள் பின்பற்றுவதில்லை. இன்றைய தலைமுறையில் இவை ஏற்கக்கூடியவை அல்ல. இந்த பழக்கங்கள் இன்னும் தொடருவது வேதனையானது.
– சுபாஷினி,25
கல்லூரி மாணவி
- ‘சிந்தனையிலேயே பின்னடைவு’
இது ஒரு பின்தங்கிய எண்ணப்போக்கைக் காட்டுகிறது. பருவமடைவது என்பது இயற்கையான ஒன்று. மாணவியை தனிமைப்படுத்தி. ஒடுக்குமுறையை ஏற்படுத்தியுள்ளனர். கல்வித்துறை இவ்விதமான சம்பவங்கள், மீண்டும் நடக்காதபடி கண்காணிக்க வேண்டும்.
– லதா,65
முன்னாள் கல்வித்துறை அதிகாரி
- ‘முற்போக்கு பேச்சில்தா’
நாம் முற்போக்கு சமூகத்தில் வாழ்கிறோம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இப்படி நடக்கும் அவலங்களைப் பார்க்கையில் கோபம் வருகிறது.
– துரைராஜ்,55, டிராவல்ஸ் ஊழியர்
- ‘கேவலமான செயல்’
உலகம் எங்கேயோ சென்று கொண்டிருக்கும்
தற்போதைய அதிநவீன காலத்தில், இதுபோன்ற செயல்கள் மிக மிக கேவலமானது. மீண்டும் கற்காலத்திற்கு செல்கிறோமா என எண்ண தோன்றுகிறது.
Leave a Reply