கோவில்பாளையம்; சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பஸ் ஸ்டாண்ட் முன், 72 அடி உயர கட்சிக்கொடி கம்பத்தில், பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி கொடியேற்றினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கோவில்பாளையம் மற்றும் குரும்ப பாளையத்தில், துவக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட பிரதிநிதி கந்தசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், நகரச் செயலாளர் சுரேந்திரன் உள்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Leave a Reply