நான்கு நாட்கள் கோவைக்கு ‘ஜில்’

கோவை; கோவை மாவட்டத்தில் வரும் 4 நாட்களுக்கு, லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.கோவையில் தென்மேற்கு பருவமழை காரணமாக, வெப்பம் முற்றிலும் தணிந்து, சில்லென்ற பருவநிலை நிலவுகிறது. நேற்று முன்தினம் மாலையில் இருந்தே, வானம் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்தது. நேற்று இரவு வரை, சாரல் மழை தொடர்ந்தது.வானிலை மைய அறிக்கை:

இன்றும், நாளையும் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18, 19ம் தேதிகளில், கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20, 21ம் தேதிகளில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.