கோவை; கோவை மாநகராட்சியில், 22 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கூடியுள்ள நிலையில், போதிய துாய்மை பணியாளர்கள் இல்லாததால், குப்பை மேலாண்மையில் சுணக்கம் ஏற்படுவதுடன், பணிச்சுமையும் அதிகரித்துள்ளது.கோவை மாநகராட்சியானது, 257.04 சதுர கி.மீ., பரப்பளவில், 100 வார்டுகளை கொண்டுள்ளது. 2011ல் இதன் எல்லை விஸ்தரிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன்பு குப்பை மேலாண்மை பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது, பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த, தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்தது.
மாநகராட்சியில், 22 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கூடியுள்ளது. ஆனால், குப்பை மேலாண்மையில், 1,999 நிரந்தர பணியாளர்கள், 4,650 ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்; தவிர, 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர். நிரந்தர பணியாளர்கள் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மட்டுமே ஈடுபடுகின்றனர்.
குப்பை சேகரிப்பு பணிகளை, ஒப்பந்த பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். வீடு, வீடாக தள்ளுவண்டியுடன் சென்று மக்கும், மக்காத குப்பை என இரண்டாக தரம் பிரித்து வாங்குகின்றனர். ஆனால், ஆட்கள் பற்றாக்குறையால் கூடுதல் பணிச்சுமையுடன், பணி நேரமும் கூடுவதாக புலம்புகின்றனர்.
ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
காலை, 6:00 முதல் மதியம், 1:00 மணி வரை எங்களுக்கு பணி நேரம். ஆரம்பத்தில் ஒருவருக்கு, 150 வீடுகள் மட்டுமே குப்பை சேகரிக்க ஒதுக்கப்பட்டது. தற்போது, 250 வீடுகளாக அதிகரித்துள்ளது. மூன்று பேர் பார்க்கும் வேலையை, ஒருவர் பார்க்கிறோம்.
Leave a Reply