திருப்பூர் மாவட்டம் நல்லூரில் உள்ள ஸ்ரீ பத்மினி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகள் ஸ்ரீ ஹரினி ( வயது 19) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை – அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி ( ரசாயனம் )இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் . கல்லூரி ஹாஸ்டலில் தங்கி உள்ளார். இவர் தங்கி இருந்த அறையில் நேற்று யாரும் இல்லாத நேரம் ஜன்னல் கம்பியில் சுடிதார் துப்பட்டாவை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை -இது குறித்து இவரது தந்தை சுப்பிரமணியம் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

Leave a Reply