புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் லஸ்பேட்டையில் வசிக்கும் அசோகன் என்பவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மோசடி செய்துள்ளது ஒரு கும்பல்.. அந்த கும்பல் நாடு முழுவதும் ரூ.50 கோடி மோசடி செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் கோவையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த அசோகன் என்பவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய அவர் குறுஞ்செய்தி வந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.பின்னர் அவர்கள் கூறியபடி கிரிப்டோகரன்சியில் ரூ.98 லட்சத்தை பல்வேறு தவணைகளாக முதலீடு செய்திருக்கிறார். அதன் பின்னர் அவரது கணக்கில் ரூ.9 கோடி இருந்தது தெரியவந்தது.ஆனால் அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் அவர் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த நபர் எடுக்கவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அசோகன் இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டதை புதுச்சேரி போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்து சென்றனர்.
Leave a Reply