மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில், தாயை பிரிந்த குட்டி யனையை, கடந்த 18 நாட்களாக தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் நேற்று சிறுமுகை வனச்சரக பகுதியில் இருந்து பொள்ளாச்சி கோழிக்கமுத்தி யானைகள் முகாமிற்கு குட்டி யானை மாற்றப்பட்டது.மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில், தாயை பிரிந்த குட்டி யனையை, கடந்த 18 நாட்களாக தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் நேற்று சிறுமுகை வனச்சரக பகுதியில் இருந்து பொள்ளாச்சி கோழிக்கமுத்தி யானைகள் முகாமிற்கு குட்டி யானை மாற்றப்பட்டது.ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, யானைக் கூட்டம் வனப்பகுதிகளில் தென்படவில்லை. குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி நேற்று முன் தினம் வரை நடைபெற்றது.

தாய் யானை கிடைக்காததால் குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்தது. மேலும் தாயை பிரிந்த யானை, சரியான முறையில் உணவு எடுத்துக் கொள்ள முடியாததால், உடல் மெலிந்து காணப்பட்டு வந்தது.
இதனிடையே, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர் ஆணைப்படி, குட்டி யானை, சிறுமுகை வனப்பகுதியில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம் கோழிக்கமுத்தி யானைகள் முகாமிற்கு நேற்று காலை 5 மணிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.—-
Leave a Reply