கோவை மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் சாலையோரம் உள்ள தர்ப்பூசணி கடையில் ஒற்றை காட்டு யானை பாகுபலி பழங்களை ருசி பார்த்தது. இந்த யானையை பட்டாசு வெடித்து வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டினர்.
காட்டு யானை பாகுபலி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, சிறுமுகை, நெல்லித்துறை, சமயபுரம், வச்சினம்பாளையம், லிங்காபுரம், ஓடந்துறை, பாலப்பட்டி, உள்ளிட்ட இடங்களில் கடந்த பல வருடங்களாக காட்டு யானை பாகுபலியின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, சிறுமுகை, நெல்லித்துறை, சமயபுரம், வச்சினம்பாளையம், லிங்காபுரம், ஓடந்துறை, பாலப்பட்டி, உள்ளிட்ட இடங்களில் கடந்த பல வருடங்களாக காட்டு யானை பாகுபலியின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது
.விளை நிலங்கள் சேதம்
இந்த காட்டு யானை, பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் இருக்கிறது. ஆனால் இரவு நேரங்களில் விவசாயிகளின் விளை நிலங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. காட்டு யானை பாகுபலி, வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலத்தில் பயிர்களை பல முறை சேதப்படுத்தி சென்றுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
தர்ப்பூசணி கடைக்கு புகுந்த காட்டு யானை
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், சாலையோரத்தில் ஒரு தர்ப் பூசணி கடை உள்ளது. இந்த நிலையில் இரவு நேரம், வனத்தில் இருந்து வெளியே வந்த காட்டு யானை பாகுபலி, தர்ப்பூசணி கடையை நோக்கி சென்று, அங்கு வைத்திருந்த பழங்களை உண்ண ஆரம்பித்தது.
இந்த காட்டு யானை, பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் இருக்கிறது. ஆனால் இரவு நேரங்களில் விவசாயிகளின் விளை நிலங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. காட்டு யானை பாகுபலி, வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலத்தில் பயிர்களை பல முறை சேதப்படுத்தி சென்றுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
தர்ப்பூசணி கடைக்கு புகுந்த காட்டு யானை
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், சாலையோரத்தில் ஒரு தர்ப் பூசணி கடை உள்ளது. இந்த நிலையில் இரவு நேரம், வனத்தில் இருந்து வெளியே வந்த காட்டு யானை பாகுபலி, தர்ப்பூசணி கடையை நோக்கி சென்று, அங்கு வைத்திருந்த பழங்களை உண்ண ஆரம்பித்தது.
மேட்டுப்பாளையம் வனத் துறை
இந்த சம்பவம் தொடர்பாக, மேட்டுப்பாளையம் வனத் துறைக்கு தகவல் வழங்கப்பட்டதன் மூலம், வனத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து, காட்டு யானையை வனத்திற்குள் விரட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மேட்டுப்பாளையம் வனத் துறைக்கு தகவல் வழங்கப்பட்டதன் மூலம், வனத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து, காட்டு யானையை வனத்திற்குள் விரட்டினர்.
பாகுபலி யானை கடையில் தர்ப் பூசணி எடுத்து சாப்பிடும் காட்சி, தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Leave a Reply