‘தினமலர்’ ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி நிறைவடைந்தது

கோவை; கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், நான்கு நாட்களாக நடந்த, ‘தினமலர்’ ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் என்கிற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, நேற்று நிறைவடைந்தது.சத்யா நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இக்கண்காட்சியில், 300க்கு மேற்பட்ட அரங்குகள் இருந்தன. குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் கண்காட்சிக்கு வருகை தந்து பயனடைந்தனர். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.’பில்டு எக்ஸ்போ’ மற்றும் ஆட்டோமொபைல் அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. படகு சவாரி, வாட்டர் ரோலிங், புல்லட், காளையை அடக்கும் விளையாட்டுகளில் ஈடுபட்ட குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புட் கோர்ட்டில் சைவம், அசைவம் என இரு விதமான உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்தனர். ‘புட்லுாஸ்’ நடன குழுவினரின் கலைநிகழ்ச்சி கண்காட்சிக்கு வந்திருந்தோரை மகிழ்ச்சிப்படுத்தியது. ஒரே இடத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன், மன நிறைவாக பொதுமக்கள் ‘ஷாப்பிங்’ செய்தனர்.

நன்றி… நன்றி…நன்றி!

கண்காட்சியை இணைந்து வழங்கிய சத்யா நிறுவனம் மற்றும் ‘கோ–ஸ்பான்சர்’களான அல்ட்ரா நிறுவனம், கோவை லட்சுமி, வுட் ஸ்பார்க், நியூ மென்ஸ், ஆல்பா பர்னிச்சர் மற்றும் ஜி ஸ்கொயர் ஆகிய நிறுவனங்களுக்கு ‘தினமலர்’ மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறது. கண்காட்சி நடத்த அனுமதியளித்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், செய்தி – மக்கள் தொடர்பு துறை மற்றும் காவல் துறை, தீயணைப்பு துறையினர் மற்றும் கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை மருத்துவ குழுவினர், ‘புட்லுாஸ்’ நடனக்குழுவினர் மற்றும் ‘கொடிசியா’ நிர்வாகத்துக்கும் நன்றி. அரங்குகள் அமைத்திருந்த நிறுவனத்தினர், கட்டுமான நிறுவனங்கள், புரமோட்டர்கள், வங்கி நிர்வாகங்கள், கார் மற்றும் இரு சக்கர வாகன டீலர்கள், வர்த்தகர்களுக்கும் நன்றிகள்!