கோவை ; கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், பள்ளி, கல்லுாரிகளில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமாக, மதுக்கடை பார்களில் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கப் போவதாக, உணவு பாதுகாப்பு அலுவலர் அறிவித்துள்ளார்.தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு சார்பில், மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்னை குறித்து, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில உணவு பாதுகாப்புத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. தவிர, கல்விநிறுவனங்களின் உணவகங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ” மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம், உணவு பாதுகாப்பு, தரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உணவு கலப்படம் குறித்து செயல்முறை அளிக்கப்படும். அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், டாஸ்மாக் பார் என உணவு கையாளப்படும் அனைத்து இடங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்,” என்றார்.
டாஸ்மாக் மது பார்களில், ‘சைடு டிஷ்’ என்ற பெயரில் வழங்கப்படும் கடலை, மரவல்லிக்கிழங்கு, அசைவ பொரியல்கள், பழங்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில், தரம் இருப்பதில்லை. இது போன்ற பார்களில் பயன்படுத்தப்படும் ஆயிலின் தரம் கேள்விக்குரியது. பழைய முட்டைகள் பயன்படுத்தப்படுவதாகவும் புகார் உள்ளது.
போதையில் இருப்பதால், குடிகாரர்களுக்கு இது எதுவும் தெரிவதில்லை. உணவு பாதுகாப்பு அதிகாரி என்ற பெயரில், இதுவரை வாகனத்தில் வலம் வந்த அதிகாரிகள் எவரும், மது பாரில் சோதனை செய்ததாக தெரியவில்லை. புதிய அதிகாரி அனுராதாவும் உறுதியளித்தது போல், மது பார்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
டாஸ்மாக் மது பார்களில், ‘சைடு டிஷ்’ என்ற பெயரில் வழங்கப்படும் கடலை, மரவல்லிக்கிழங்கு, அசைவ பொரியல்கள், பழங்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில், தரம் இருப்பதில்லை. இது போன்ற பார்களில் பயன்படுத்தப்படும் ஆயிலின் தரம் கேள்விக்குரியது. பழைய முட்டைகள் பயன்படுத்தப்படுவதாகவும் புகார் உள்ளது. போதையில் இருப்பதால், குடிகாரர்களுக்கு இது எதுவும் தெரிவதில்லை.
Leave a Reply