தொண்டாமுத்துார்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கொடிக்கம்பம் உள்ள பகுதியில், தகர ஷீட் மேற்கூரை இருந்தது. அது சேதமடைந்ததால், புதியதாக கட்ட திட்டமிட்டு, உபயதாரர் மூலம் 1.60 கோடி ரூபாயில் வசந்த மண்டபம் கட்டப்பட்டது.இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சியில் திறந்து வைத்தார்.

கோயிலில் நடந்த விழாவில், கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிசெல்வன், ஈஸ்வர் ராம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
Leave a Reply