பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி:
கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 27-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்வில் பாஜக தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம். பி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
/
இதில் சிறப்புரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெளிநாட்டு பாதுகாப்பு கருவிகளை கொள்முதல் செய்வதோடு, உள்நாட்டிலும் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்து வருவதாக குறிப்பிட்டார்.
Leave a Reply