கோவை:ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளுக்கு இணங்காத, தமிழகத்தில் உள்ள ஐந்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில், புதிதாக சேரும் மாணவர்களுக்கு ராகிங் கொடுமை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிகழ்ந்து வந்தது. இதை தடுக்க, யு.ஜி.சி., பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பல்கலை, கல்லுாரி, கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுக்க, 2014ல் புதிய விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டன.அதன்படி, அனைத்து கல்வி நிறுவனங்களும் ராகிங் தடுப்பு குழு, ராகிங் தடுப்பு படை, உடனடி உதவி திட்டம் ஆகியவற்றை உருவாக்க அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களின் ராகிங் தடுப்பு உறுதிமொழி, கல்வி நிறுவனங்களின் உறுதிமொழியை சமர்ப்பிக்க யு.ஜி.சி., அறிவுறுத்தியது.

பல கல்வி நிறுவனங்கள் இந்த ஆவணங்களை சமர்பிக்கவில்லை. பலமுறை நினைவூட்டியும் சமர்பிக்காததால், விளக்கம் கேட்டு யு.ஜி.சி., நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள, 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தை சேர்ந்த ஐந்து உயர்கல்வி நிறுவனங்கள் அடங்கும்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை, சென்னை ஜேப்பியார் பல்கலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, தஞ்சாவூர் சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாடமி, திருச்சி ஐ.ஐ.எம்., ஆகிய உயர் கல்வி நிறுவனங்கள் இதில் அடங்கும்.
Leave a Reply